ஷா ஆலம்:
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள முக்கிய தகவல் தொடர்பு அமைப்புகளை நாசப்படுத்தும் நோக்கத்துடன் தொடர்பு கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 13 நபர்களை பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓப் லுசு முலியா என்ற நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் அரசாங்க தரவு உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையை ஆதரிக்கும் முக்கியமான வழிகளில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.




















