கோலாலம்பூர், ஜூன் 16 :
ஜோகூர்பாரு – உட்லண்ட்ஸ் இடையிலான கேடிஎம் ரயில் சேவை எதிர்வரும் ஜூன் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிற நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான வார இறுதி நேரங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் சேவை ஒவ்வொரு நாளும் இருவழி பயணங்களும் சேர்த்து மொத்தம் 31 சேவைகள் இருப்பதால், பரபரப்பான நேரம் அல்லாத மற்றைய நேரங்களுக்காக டிக்கெட்டுகள் நிறையவே இருக்கின்றன.
ஜோகூர் பாருவிலிருந்து பயணம் செய்பவர்கள் 5 வெள்ளி (1.56 சிங்கப்பூர் டாலர்) செலுத்த வேண்டும் என்றும் உட்லண்ட்ஸ்-இல் இருந்து ஜோகூர் பாரு செல்பவர்கள் 5 வெள்ளி செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கோவிட்-19 தொற்றுக் காரணமாக இச்சேவை மார்ச் 2020-இல் இருந்து இந்தச் சேவை ரத்துசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.