பெயிண்ட் கடையில் தீ ; இரு தொழிலாளர்கள் காயம்

கூலிம்:

ங்குள்ள ஜாலான் கூலிம் பாலிங்கில் உள்ள தொழிற்சாலையில் உள்ள பெயிண்ட் கடையில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் இருவர் தீக்காயம் அடைந்தனர்.

தொழிற்சாலை தொழிலாளர்கள் என நம்பப்படும் 40 வயதுடைய பாதிக்கப்பட்ட இருவரும் கூலிம் மருத்துவமனைக்கு (HK) அனுப்பி வைக்கப்பட்டனர் என்று, கூலிம் ஹைடெக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், மூத்த துணை தீயணைப்புத் தலைவர் அஸ்மிர் ஹாசன் கூறினார்.

சம்பவம் தொடர்பாக காலை 8.55 மணியளவில் அவரது தரப்புக்கு அழைப்பு வந்தது என்றும், 12 பேர் கொண்ட குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது, லூனாஸ் தன்னார்வ தீயணைப்புப் படையும் இந்த நடவடிக்கைக்கு உதவியது என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் இரு ஆண்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடை 80 சதவீதம் அழிந்ததாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here