பினாங்கில் மூன்று மணி நேர சாலை பாதுகாப்பு நடவடிக்கை; 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ஜார்ஜ் டவுன்:

ங்குள்ள பாயான் லெப்பாஸில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) 3 மணி நேர சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது மொத்தம் 50 மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

“பாயான் லெப்பாஸில் உள்ள துன் டாக்டர் லிம் சோங் யூ எக்ஸ்பிரஸ்வேயில் சாலைத் தடுப்பு நடவடிக்கை அதிகாலை 2 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நீடித்தது” என்று தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் கமாருல் ரிசல் ஜெனால் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 61(1)ன் கீழ் 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதே சட்டத்தின் 108வது பிரிவின் கீழ் ஒரு மோட்டார் சைக்கிள் தவறான பதிவு எண் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here