பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 2 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பிலிப்னைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல் அதிகம் காணப்படும் பூகோள அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாடு உள்ளது. இங்கு எரிமலை வெடிப்பு, புயல், நிலநடுக்கம் போன்றவை பெருமளவில் நடைபெறுவதால் தீவிர பேரிடர் பாதிப்புகளுக்கு ஆளாக சர்வதேச நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பிலிப்னைன்ஸ் நாட்டில் மிண்டானோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. இதன்காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சேதம் அல்லது உயிரிழப்பு பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மேலும், பிலிப்னைன்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here