ஜெய்ன் ராயன் கொலை வழக்கு; சுமார் 2,400 வீடுகளில் சோதனை

பெட்டாலிங் ஜெயா :

நாட்டில் பெரும்வைரலாகிய ஜெய்ன் ராயனின் மரணம் கடுமையான சர்ச்சைகள் சந் தேகங்கள் நடுவே காவல்துறை பல்வேறு கோணங்களில் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க தேசிய காவல்துறை டாமான்சாரா டாமாய் இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடாகத் தொடர்ந்து சோதனை நடத்தவுள்ளது.

நாங்கள் எங்களால் முடிந்த எல்லா நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளோம், மக்கள் தேவையற்ற விமர்சனங்களை ஊகங்களாக வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் இந்த வழக்கின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் உறுதியாகவுள்ளோம் என்கிறார் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான்.

முதலில் சம்பவம் நடந்த இடத்திலும், சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியும் தேடுதல் மற்றும் உடல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம்.

பின்னர் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்துவதாகும். இந்தப் பகுதியில் சுமார் 2,400 வீடுகள் உள்ளடங்கிய 18 தளங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here