ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என்கிறார் இஸ்ரேல் அதிபர்

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காஸாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போரால், காஸாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன.

இதன் ஒருபகுதியாக ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99-வது பிரிவைப் பயன்படுத்தி அவசரக் கூட்டத்திற்கு ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் குட்ரெஸ் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் காஸாவில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது உயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது.

ஹமாஸ் அமைப்பிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்தது. இதனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போரைத் தொடர்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here