பெட்டாலிங் ஜெயா:
கடந்த செப்.16-ம் தேதி நடந்த “மலேசியாவை பாதுகாப்போம்” பேரணி குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய பெரிகாத்தான் நேஷனல் இளைஞரணி தலைவர் அஹ்மட் ஃபாட்லி ஷாரி மீண்டும் காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளார்.
“இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலை 11 மணிக்கு டாங் வாங்கி காவல் நிலையத்தில் இருப்பேன்” என்று பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
“ஒரு மாத காலத்திற்குள் நான் வாக்குமூலம் வழங்குவது இது மூன்றாவது முறையாகும். காவல் துறையினர் தங்களது கடமைகளை மிகவும் சிறப்பாகச் செய்து வருகின்றனர்” என்றார் அவர்.
மேலும் பெரிக்காத்தான் எப்போதும் காவல்துறைக்கு ஒத்துழைக்கும் என்று அஹ்மட் ஃபாட்லி கூறினார்.