கோலாலம்பூர்:
அம்னோவில் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் பலவீனப்படுத்தப்படுகிறார் என்று பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் வான் சைபுல் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்னோவின் ஆதரவில்தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தார்.இதில் அம்னோ துணைத் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு தற்காப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்காப்பு அமைச்சர் என்பது மிகப் பெரிய சக்தி வாய்ந்த பொறுப்பாகும். ஆனால் தற்போது முகமத் ஹசான் தற்காப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். அதற்கு பதிலாக டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்னோவில் முகமட் ஹசானின் சக்தியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடக்கம் தான் இந்த பதவி மாற்றம். வெளியுறவு அமைச்சர் என்பதால் ஹசான் அடிக்கடி வெளிநாட்டில் இருக்க வேண்டும். இதனால் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தனது நிலையை வலுப் படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.