அரை கால் சட்டையுடன் MPKS அலுவலகத்திற்கு வந்த ஆடவரை சாரோங் அணிய அறிவுறுத்தல்

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPKS) அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, குட்டைச் சட்டை அணிந்த ஒருவருக்கு அணிய ஒரு சாரோங் (கைலி) வழங்கப்பட்டது. MPKS அலுவலக கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள காவலர் ஒருவர் கைலியை அணிந்து கொள்ளச் சொன்னதை அடுத்து, 53 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இது இப்போது புதிய விதியாகும். அங்கு ஷார்ட்ஸ் அணியக்கூடாது, ஆண்கள் ‘kain pelikat’ அணிய வேண்டும், பெண்கள் ‘பாதேக் ஆடையை’ அணிய வேண்டும் என்று காவலர் கூறுவது கேட்கப்படுகிறது. அதற்கு இணங்குகிற ஆடவர், கைலியை  சரிசெய்துகொண்டிருப்பதைக் காணலாம். இந்த வீடியோவை யார் எடுத்தார்கள் அல்லது பதிவேற்றினார்கள். எப்போது படம் பிடித்தார்கள் என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here