ஷா ஆலம்:
சட்டவிரோதமாக தாயகம் திரும்ப விரும்பிய 56 இந்தோனேசியர்கள், அசுத்தமான ஒரு வீட்டில் முகவர்களால் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் பிரிவு (Atipsom) D3 ஆகிய துறையினர், ஜாலான் கெபூனில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நடத்திய சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நான்கு அறைகளைக் கொண்ட அந்த வீடு மிகவும் அழுக்காகவும், துர்நாற்றமாகவும், எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த உடைகள் மற்றும் சாமான்களால் சிதறிக் கிடந்ததைக் காணமுடிந்தது.
அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் கடத்துவதற்கு முன்பு, அவர்களை தங்க வைக்க குறித்த குடியிருப்பை பயன்படுத்தியிருக்கிறார் என்று புரிகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் மொத்தம் 43 பதி ஆண்கள், ஒரு நெரிசலான அறையில் உட்கார்ந்து தூங்க வேண்டியிருந்தது, அதே நேரத்தில் 12 பெண்கள் நான்கு அறைகளில் தூங்கினர்.
தன்னையும் தன் மனைவியையும் மீண்டும் இந்தோனேசியாவிற்கு அழைத்து வர முகவருக்கு 3,500 ரிங்கிட் கொடுத்ததாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூறினார்.
மேலும் (நேற்று) இரவு 9 மணிக்கு இந்தோனேசியாவுக்குத் திரும்புவதற்காக படகில் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு நாங்கள் இங்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டோம் என்றார் அவர்.