ஆற்றில் மூழ்கியபோது மீட்கப்பட்ட சிறுமி மரணம்; தோழியைக் காணவில்லை

ரந்தாவ் பஞ்சாங் :

Kampung Petai Dusun என்ற இடத்தில், நேற்று ஆற்றில் மூழ்கிய 11 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில் அவரது தோழியைக் காணவில்லை.

மாலை 6.39 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 11 வயதான சித்தி ஆயிஷா மஹ்ஸி நீரில் மூழ்கிய நிலையில் நேற்றிரவு 7.15 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தானா மேரா மருத்துவமனையில் (HTM) சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அவரது தோழியான நூர் டாமியா கைசரா, 11, என்பவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ரந்தாவ் பஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி அஸ்மி ஜாபர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மற்றொருவரைக் கண்டறியும் பொருட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை (SARS) நடைபெற்று வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ஆற்றில் குதித்தபோது டாமியாவும் ஐஸ்யாவும் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதாக பாதிக்கப்பட்டவர்களின் மற்றுமொரு நண்பியான நூரின் நடாஷா கிஸ்டினா முகமட் ஃபைருல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here