வெள்ளத்தில் மூழ்கியது மெர்சிங்

ஜோகூர் பாரு:

நேற்று அதிகாலையில் இருந்து பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டம் மெர்சிங் பதிவானது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தங்குவதற்காக தாமான் நெகாரா எண்டாவ் ரொம்பினில் ஒரு தற்காலிக நிவாரண மையம் நேற்று மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது என்று மெர்சிங் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் முகமட் ஷாகிப் அலி கூறினார்.

“தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் ஒராங் அஸ்லி பேத்தாவில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கிராமத்திற்கு செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், தெங்காரோ தைமூர், மெர்சிங் செல்லும் சாலை வெள்ளம் காரணமாக அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here