வாடகை வீட்டில் பெண் ஆசிரியை ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுப்பு

கோல திரெங்கானு:

நேற்று மாலை, கம்போங் பெங்காடாங் பாருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 50 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

வீட்டின் உரிமையாளர் முகமட் அசிரஃப் பக்ரி, குறித்த ஆசிரியையை ஒரு வாரமாக தொடர்பு கொள்ள முயன்று தோல்வியடைந்ததால், மாதாந்திர வாடகை கேட்க அங்கு வந்தார் என்றும், அவரும் அவரது தாயாரும் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் வீட்டிற்குள்ளிருந்து எந்த பதிலும் வராததால் தாம் ஜன்னலைத் திறக்க முயற்சித்ததாக அவர் கூறினார்.

“ஒரு அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ​​கடுமையான துர்நாற்றம் வீசியது, பின்னர் தாம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும், அவர் கடந்த 13 ஆண்டுகளாக தனியாக அந்த வீட்டில் வாடகைக்கு இருந்துவந்தார் .

“பாதிக்கப்பட்டவர் அக்கம்பக்கத்தினருடன் நன்றாகப் பழகுவதில்லை, எனவே, அவர் வீட்டை விட்டு வெளியே வராததை பலர் கவனிப்பதில்லை, ”என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here