வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த இரட்டை அடுக்கு விரைவு பேருந்து!

ஸ்லிம் ரிவர்:

ன்று அதிகாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (Plus) 375.4 ஆவது கிலோமீட்டரில் இரட்டை அடுக்கு விரைவு பேருந்து தீப்பிடித்ததில் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 17 பயணிகள் உயிர் தப்பினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 5.19 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது என்றும், உடனே தஞ்சுங் மாலிம் தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன் ஸ்லிம் ரிவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) பேராக் செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

“அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஜோகூரில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படும் இரட்டை அடுக்கு விரைவுப் பேருந்து தீப்பிடித்து எரிவதைக் கண்டனர்.

“14 ஆண் மற்றும் மூன்று பெண் பயணிகள் மற்றும் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்திலிருந்து வெளியேறியிருந்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பேருந்து 80 விழுக்காடு எரிந்துள்ளதாகவும், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சபரோட்ஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here