புக்கிட் ஜாலீலில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்ணை அநாகரீகமாக காணொளி பதிவு செய்த ஆடவர் கைது

கோலாலம்பூர்:

புக்கிட் ஜாலீலில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த நிகழ்ச்சியின் போது அநாகரீகமாக வீடியோ பதிவு செய்ததாக 33 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (ஜனவரி 19) நடந்த இந்த சம்பவம் குறித்து மூன்று போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஹலீம் ஜமாலுதீன் கூறினார்.

“வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில், மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, குறித்த ஆண் மேடைக்கு கீழே இருந்து அநாகரீகமான வீடியோ எடுப்பதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்தபோது, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் இன்று (ஜன. 20) வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவரின் நண்பரும் மற்ற பொதுமக்களும் சந்தேக நபரை வணிக வளாகத்தில் வைத்து பிடித்து, புக்கிட் ஜாலீல் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சந்தேக நபரை போலீசாரிடம் ஒப்படைந்தனர்.

“இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 மற்றும் சிறு குற்றங்கள் சட்டம் 1955 இன் பிரிவு 14 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

“சந்தேக நபர் திங்கள்கிழமை (ஜனவரி 22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here