ஜோகூர் பாரு:
பொது இடத்தில் ஆடைகளின்றி சுற்றித்திரிந்த 37 வயது ஆடவர் ஒருவரை ஜோகூர் பாரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆடவர் ஜனவரி 19ஆம் தேதியன்று பின்னிரவு 1.38 மணிக்குக் கைதானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆடவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இங்குமங்கும் நடந்துகொண்டிருப்பதாக ஒரு பெண் அளித்த புகாரைத்தொடர்ந்து, குறித்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
தன்னுடைய காதலி தன்னை விட்டுப் பிரிந்த துயரை ஆடவரால் தாங்க முடியவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ஆடவர் மதுபானம் அருந்தியதாகவோ போதைப்பொருள் உட்கொண்டதாகவோ தெரியவில்லை என்றும் இதற்குமுன் அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததில்லை என்றும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, ஆடவர் ஆடைகளின்றி வலம்வருவதைக் காட்டும் காணொளி பரவலாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.