கோலாலம்பூர்: மன்னிப்பு வாரியம் நேற்று இஸ்தானா நெகாராவில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார். நஜிப் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பம் மீதான வாரியத்தின் முடிவு இன்று வெளியிடப்படும் என்று தி எட்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது.
வாரியக் கூட்டத்தில் பங்கேற்பதை ஜாலிஹா உறுதிப்படுத்தினார். ஆனால் அவர்கள் நஜிப்பின் விண்ணப்பத்தைப் பற்றி விவாதித்தார்களா என்பதை வெளியிடவில்லை. மன்னிப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருங்கள். ஆம், நான் ஈடுபட்டிருந்தேன், நாங்கள் நேற்று இஸ்தானா நெகாராவில் கூடினோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.