விமானத் தள கட்டுமானப் பகுதியில் 125 கிலோ வெடிகுண்டு கண்டெடுப்பு

கோத்தா பாரு: பெங்காலன் செப்பாவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலைய கட்டுமான தளத்தில் 98 சென்டிமீட்டர் நீளமுள்ள வான் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  வடிகால் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் 125 கிலோ எடையுள்ள வெடிகுண்டை கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தா பாரு காவல்துறைத் தலைவர் ரோஸ்டி டாட் தெரிவித்தார்.

கிளந்தான் போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் பிற்பகல் 3.20 மணியளவில் வெடிகுண்டு அகற்றப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் விமான நிலையம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here