ரவாங்:
ரவாங்கில் உள்ள கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த தொழிலதிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
நேற்றுக் காலை 10.30 மணியளவில் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, குறித்த தொழிலதிபர் திடீரென சரிந்து விழுந்தார்.
பின்னர் மதியம் 12.25 மணியளவில் பாதிக்கப்பட்ட நபர் தொடர்பான சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று, உலு சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அஹ்மட் பைசல் தஹ்ரிம் கூறினார்.
“பாதிக்கப்பட்டவருக்கு 2018 முதல் இதயப் பிரச்சனைகள் இருந்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது,” என்றும், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக உடல் கோலக் குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பைசல் கூறினார்.
“இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.