கோலாலம்பூர்:
டுத்தா-உலு கிள்ளான் நெடுஞ்சாலையின் 2.7ஆவது கிலோமீட்டரில் நேற்று நடந்த விபத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பத்து டோல் பிளாசா அருகே ஸ்தாப்பாக் திசையில் சுங்கை பீசி நோக்கி மதியம் 12.58 மணியளவில் யமஹா ஈகோ சோலாரிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் லோரி மோதி விபத்து ஏற்பட்டது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் (JSPT) துணை ஆணையர் சரிபுதீன் முகமட் சாலே கூறினார்.
“ஜாலான் கூச்சிங்கை நோக்கி வெளியேறும் பாதையில் வந்தபோது, இரண்டு வாகனங்களும் மோதியதால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லோரியின் முன் விழுந்தார்.
“விபத்தின் விளைவாக, 31 வயதான பெண் போலீஸ் அதிகாரியான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பலத்த காயம் அடைந்தாதன் காரணமாக இடத்தில் இறந்ததாக கோலாலம்பூர் மருத்துவமனை (HKL) மருத்துவ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது.
“மோட்டார் சைக்கிள் பயணியான 33 வயதான பெண் போலீஸ் அதிகாரியான பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக HKLக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
லோரி ஓட்டுநரான 38 வயதுடைய நபருக்கு விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சரிபுதீன் கூறினார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்பட்டது.