பெட்டாலிங் ஜெயா:
பெர்சாத்துக் காட்சிக்கு விரைவில் புதிய தலைமை தேவை என அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
முஹிடின் இல்லாமல் ஒரு சிறந்த தலைவர் பெர்சாத்து கட்சியில் இருக்க முடியாது என்று கட்சிக்குள் எழுந்த குரல்களை மறுத்த அவர், கட் சியினை சரியான பாதையில் வழி நடத்தக்கூடிய நம்பகமான இளம் தலைவர்கள் பெர்சாத்துவில் இருப்பதாக அவர் கூறினார்.
“என்னால் நீண்ட காலம் இருக்க முடியாது, புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன். ஜனநாயக அமைப்பு மூலம் பெர்சாத்துவில் மாற்றம் ஏற்படும்” என்று முஹிடின் கூறினார்.
“பெர்சாத்து மலாய்காரர்களின் போராட்டத்துக்கான கட்சி, மாறாக முஹிடினுக்கான கட்சி அல்ல. ஆரம்பத்திலிருந்தே எனது போராட்டத்தின் அடிப்படை இதுதான், தற்போதைய தலைமையிலும் நான் அதைத் தான் தொடர்கிறேன் , ”என்று அவர் கூறினார்.