தீபகற்ப மலேசியாவின் வட பகுதியை வாட்டும் வெப்ப அலை -ஆரம்ப நிலை எச்சரிக்கையை அறிவித்தது மலேசிய வானிலை ஆய்வு மையம்

பட்டர்வொர்த்:

தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சில இடங்களைக் கடும் வெப்ப அலை வாட்டி வருகிறது.

இந்தக் கடும் வெப்ப அலைக்கான ஆரம்ப நிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று (பிப்ரவரி 25) விடுத்துள்ளது.

பெர்லிஸ் மாநிலம்; கெடாவில் உள்ள லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாலிங், சிக், பாடாங் தெராப்; பேராக்கில் உள்ள கோலா கங்சார்; பினாங்கில் உள்ள மத்திய செபெராங் பிறை ஆகிய இடங்களில் ஆரம்பநிலை கடும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் 37 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருந்தால் ஆரம்பநிலை கடும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here