நாடாளுமன்றம் நோக்கி செல்ல 100க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் திரண்டனர்

கோலாலம்பூர்: அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இன்று நடைபெற்ற பெர்சே பேரணியில் சுமார் 100 ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.  பிளாசா துகு நெகாராவில் காலை 8 மணிக்கு கூடிய கூட்டம் சுமார் 8.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக செல்ல தொடங்கியது.

எதிர்ப்பாளர்கள் மஞ்சள் நிற பதாதைகளை ஏந்திய வண்ணம், “சுகமாக இருக்காதீர்கள்” மற்றும் “சுத்தமாகவும் நியாயமாகவும்”, “Tuntut Reformasi, Tolak DNAA, Rakyat Bangkit” என்று கோஷமிட்டனர். போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மகஜர் ஒன்றை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், பெர்சே அமைப்பு அரசியல் சீர்திருத்தங்களுக்கான அதன் நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கம் உறுதியளிக்கவில்லை என்றால், மீண்டும் சாலைப் போராட்டங்களை நடத்தத் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தது. X இல் முந்தைய இடுகைகளில், தேர்தல் கண்காணிப்புக் குழு, பிரதமரின் பதவிக் காலத்திற்கான வரம்பு மற்றும் தேசத்துரோகச் சட்டத்தை ஒழித்தல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை எடுத்துக்காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here