இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காசாவில் போரை நிறுத்த சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில் பாலஸ்தீனத்தில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, அமெரிக்கா முயன்று வருவதாகவும் இதன் காரணமாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே முகம்மது ஷ்டய்யே ராஜினாமா முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.