பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை- போலீஸ்

கோலாலம்பூர்:

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் செக்ரடேரியட் சாலிடாரிட்டி பாலஸ்தீனம் (SSP) எனும் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

கடந்த வியாழனன்று போலீசார் குறித்த பேரணி அமைப்பாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர், அதில் அவர்கள் பேரணிக்கான அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு SSPக்கு அவர் அறிவுறுத்தியதாகவும், எவ்வாறாயினும், இன்று வரை, ஏற்பாட்டாளர் பேரணி குறித்த எந்த தகவலையும் சமர்ப்பிக்கவில்லை என்று வங்சா மாஜூ காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா கூறினார்.

எனவே, பொதுமக்கள் ஒன்று கூடவோ, பேரணி நடத்தவோ கூடாது என போலீசார் அறிவுறுத்துகின்றனர். அத்தோடு சட்டத்தை மீறுபவர்கள் யாராயினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here