ஜாலான் செனிபோங்கில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டவர் பலி

ஜோகூர் பாரு:

இங்குள்ள ஜாலான் செனிபோங்கில் இன்று காலை ஏற்பட்ட கார் விபத்தில் வெளிநாட்டு சாலை பழுதுபார்க்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் இன்று காலை 6.35 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்தது என்று, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உடனே பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு இயந்திரம் மற்றும் அவசர சேவை உதவிப் பிரிவு உட்பட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றது.

கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், பாதிக்கப்பட்டவர் உயிர்ழந்ததாக கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here