ஆர்திஜி எனப்படும் தங்கப் பதக்கத்தைவெல்வதற்கான திட்டத்தில் இருந்து தேசிய முக்குளிப்பு வீராங்கனைகளான டத்தோ பண்டேலேலா ரெனுங், நூர் டபிதா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை நேற்று நடைபெற்ற ஙெ்ய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அத்திட்டத்தின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஸ்டுவர்ட் ராமலிங்கம் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக அவ்விருவரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறுவதில் தோல்விகண்டிருந்தனர். இந்நிலையில் ஆர்திஜி திட்டத்தில் இருந்து அவ்விருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.