MACCக்கு எதிரான துன் தாய்ம், அவரின் குடும்பத்தாரின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

கோலாலம்பூர்:

லேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விசாரணைக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் துன் தாய்ம் ஜைனுதீன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மறுஆய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

“விசாரணை நடத்திய MACC அதிகாரிக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது”என்று நீதிபதி வான் அஹ்மடி ஃபாரிட் வான் சாலே கூறி, குறித்த மனுவை தள்ளுபடி செய்தார்.

கடந்த ஜனவரியில் தாய்ம் , அவரது குடும்பத்தினர் தங்கள் நிதி விவகாரங்களில் MACCயின் விசாரணையை ரத்து செய்யும் முயற்சியில் நீதித்துறை மறுஆய்வுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.

பண்டோரா பேப்பர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் செய்திகளைத் தவிர, விசாரணையின் தன்மை குறித்து அவர்கள்  எதுவும் இல்லை என்று  அவர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here