ஷா ஆலாம்:
கடந்த பிப்ரவரி 28 அன்று இங்குள்ள கம்போங் ஜாவாவில் நடந்த ஒரு சம்பவத்தில், காலணிகள் மற்றும் உலோக சுத்தியலைப் பயன்படுத்தி தனது தாயை அடித்துக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஒரு நபர், பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குக் மாரடைப்பு காரணம் என்று கண்டறியப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், 33 வயதான முடிதிருத்தும் வேலைசெய்பவரானஅவர் போதைப்பொருள் குற்றங்களுக்காக மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்ட போது மெத்தாம்பேட்டமைன் பாவித்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது என்றும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.