கோலாலம்பூர்:
ரவாக்கின் பல பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) வரை தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 8) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வறிக்கையின்படி, கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெந்தோங், சரிகேய், சிபு, மூக்கா மற்றும் கபிட் ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலப்பகுதியில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இக்காலப்பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை வழங்கப்படுகிறது என்று அது தெரிவித்துள்ளது.