ஜாலான் ஜெரான்துட்-பாடாங் பியோலில் விபத்து; லோரி ஓட்டுநர் பலி

ஜெரான்துட்:

ஜாலான் ஜெரான்துட்-பாடாங் பியோலில் 26 ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட விபத்தில் லோரி ஓட்டுநர் கொல்லப்பட்டார்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், பகாங்கின் கோலா லிப்பிஸைச் சேர்ந்த சைஃபுல்நிஜாம் ஜகாரியா, 41, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெரான்துட் OCPD அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் தனது லோரியில் இரும்புச் சங்கிலியைப் பயன்படுத்தி, மரக் கட்டைகளைப் பத்திரமாக கட்டிக் கொண்டிருந்தபோது, பலியானவர் லோரியின் பின்னால் தவறி விழுந்தார்.

அதே நேரத்தில், அங்கு மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த கனரக இயந்திர இயக்குநருக்கு இயந்திரத்தின் பின்னால் பாதிக்கப்பட்டவர் இருப்பதை அறியாமல், இயந்திரத்தை நகர்த்தியதில், பாதிக்கப்பட்டவரவ இயந்திரத்தில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்,” என்று அவர் இன்று (மார்ச் 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 304A பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அஸ்மான் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here