விக்டோரியா:
சைதன்யா சுவேதா மதகனி, 30, என்பவரின் உடல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள பக்லி பகுதியில் இருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தப் பகுதியில், சக்கரங்களுடைய பச்சைநிறக் குப்பைத்தொட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் அந்த இளம் தாயின் உடல், கடந்த சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பெண்ணின் கணவர் அசோக் ராஜ் வரிகுப்பலா அண்மையில் அவர்களின் மகனுடன் இந்தியாவுக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.