ரமலான் காலத்திலும் பள்ளிச் சிற்றுண்டிச் சாலைகள் வழக்கம் போல செயற்படும்- கல்வி அமைச்சர்

கோலா லங்காட்:

நாளை (மார்ச் 12) முதல் புனித ரமலான் மாதம் ஆரம்பிப்பதால், முஸ்லிமல்லாத மாணவர்களின் நலன்கருதி பள்ளிச் சிற்றுண்டிச் சாலைகள் வழமைபோல் தொடர்ந்து செயல்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

முஸ்லிமல்லாத மாணவர்களின் தேவைகளுக்கு மற்றைய மாணவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் “புனித ரமழான் மாதம் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருத்தல் மற்றும் பரஸ்பர புரிதல் என்பவற்றிற்கு முக்கியமாக வித்திடும் என்று நம்புவதாக ,” அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here