நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர் பேரரசர் தம்பதியினர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராகிம் மற்றும் பேரரசியார் ஜரித் சோபியா ஆகியோர் நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ரமலான் அல்-முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புனித ரமலானுடன் இணைந்து கருத்து வேறுபாடுகள் இன்றி, தகராறுகள் மற்றும் மோதல்களை ஒதுக்கி வைப்பதோடு, வழிபாட்டை மேம்படுத்தவும், சக இறை விசுவாசிகளிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவொரு அச்சுறுத்தல் மற்றும் பேரழிவுகளில் இருந்து மலேசியா தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று அனைத்து இஸ்லாமியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மாமன்னர் கூறினார்.

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு நோற்கத் தொடங்குவார்கள் என்று அரசு முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சையட் டேனியல் சையட் அகமட் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here