புத்ராஜெயா:
பள்ளிகளில் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களிடையே மலாய் மொழியின் தேர்ச்சியை வலுப்படுத்த முடியும் என கல்வி அமைச்சகம் (MOE) நம்புகிறது.
இந்த நோக்கத்திற்காக, நாட்டின் முக்கிய மலாய் மொழி செய்தித்தாள்களை பெற்றுக்கொள்ள பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை, தற்போதுள்ள ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி செய்தித்தாள்களை பள்ளிகள் நேரடியாக வாங்கலாம்” என்று அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.