கோலாலம்பூர்:
மூன்று முறை கோலா குபு பாருவில் சட்டமன்ற உறுப்பினராக சேவைபுரிந்த மரியாதைக்குரிய லீ கீ ஹியோங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 21) காலை காலமானார்.
கடந்த வாரம் லீ தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடினார் என்று கூறப்படுகிறது.
லீயின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்றும், அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.