ரஷ்யா கலையரங்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
ஆரம்பத்தில், 60 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அவசர சேவைகள் மூலமாக இடிபாடுகளை அகற்றியபோது, மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் இந்த தாக்குதல் நடந்தது. அங்கு ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் பொது மக்களை துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஐஎஸ் பயங்கரவாத இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. எங்களது போராளிகள் மாஸ்கோவின் புறநகரில் ஒரு பெரிய கூட்டத்தை தாக்கினர் என்றும், மேலும் அவர்கள் பத்திரமாக தங்கள் தளங்களுக்கு திரும்பினர் என்றும் ஐஎஸ் பயங்கரவாத தெரிவித்துள்ளது.