மாராங்:
கம்போங் பூலாவ் கெரெங்காவில் உள்ள காட்டில் காட்டுக்கோழி வேட்டைக்குச் சென்றபோது, காணமல்போனதாகக் கூறப்பட்ட மூன்று இளைஞர்கள், 15 மணி நேரத்திற்கு பின் இன்று (மார்ச் 31) பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
15 மற்றும் 16 வயதுடைய இளைஞர்கள் மூவரும் இன்று காலை 8.13 மணியளவில் சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக மாராங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயற்பாட்டு பொறுப்பாளர் சுரைடி யூசூப் தெரிவித்தார்.
“பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பலவீனமாக இருந்தனர் என்றும், அவர்களின் உடலில் சிறிய காயங்கள் இருந்தன என்றும் அவர் கூறினார்.
குறித்த மூவரும் காங் பாலாய் ஹெல்த் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று அவர் கூறினார்.