கோலாலம்பூர்:
நாட்டில் இடையிடையே மழை பெய்தாலும் தற்போது நிலவிவரும் வெப்ப நிலை குறைந்தபாடில்லை. இவ்வாறிருக்க, டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் அதிகரிப்பு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 2,570 பேருக்கு டிங்கி காய்ச்சல் தொற்று இனங்காணப்பட்டதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசான் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் குறைவான தொகையை கட்டினாலும், மார்ச் 24 முதல் 30ஆம் தேதிவரையான காலப்பகுதியில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மிக அதிகமாக டிங்கி காய்ச்சல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மாநிலமாக சிலாங்கூர் உள்ளதாகவும் அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.
இந்நிலையில், டிங்கி கொசு பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு மும்மூரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே இதற்கு உறுதுணையாக மக்களும் கொசு பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.