2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காத்திருக்கும் பேராபத்துகள்… பாபா வங்கா சொன்னது இதைத்தான்

2024 ஆம் ஆண்டில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து பாபா வங்கா சில கணிப்புகளை கணித்து வைத்துள்ளார். அவை என்னவெல்லாம் என்று பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அவரின் கணிப்புகளில் செப்டம்பர் 11, 2001 இல் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை அடங்கும்.இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பற்றியும் அவர் சில கணிப்புகளைச் கணித்து வைத்துள்ளார். அதன்படி 2024இல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வெப்ப அலைகளின்போது உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது. மேலும் 1979 முதல் 1983 வரையிலான உலகளாவிய வெப்ப அலைகளின் சராசரி காலம் 2016 முதல் 2020 வரை 8 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வு காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டு வெப்ப சாதனையை முறியடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

1996 இல் பாபா வங்கா இறந்தபோது, ​​​​இன்டர்நெட் அதன் ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால், அதைப் பற்றியும் அற்புதமான கணிப்புகளைச் அவர் கணித்துள்ளார். அதில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று அவர் கணித்துள்ளார். முக்கியமான உள்கட்டமைப்பு மீதான இந்த தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும் என்றும், உலக நாடுகளிடையே அரசியல் பதட்டங்களும் கடன்சுமைகளும் அதிகரிக்கும் என்றும் வங்கா கணித்துள்ளார்.

இவை அனைத்தும் 2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் இருப்பதாக அலையன்ஸ் லைஃப் கணக்கெடுப்பு சொல்கிறது.  அதில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள வங்கா, ஒரு பெரிய உலக நாடு உயிரியல் ஆயுதங்களை சோதிக்கும் அல்லது பயன்படுத்தப்போவதாகவும் சூசகமாக கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகியவை தற்போது முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here