6 வருடத்தில் 6 கிலோ கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்த போலீசார்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் போலீசார் வழக்கு ஒன்றின் சம்மந்தமாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ஒரு நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் ஒன்பது கிலோ பாங் ஆகியவற்றை எலிகள் தின்றுவிட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா மற்றும் பாங் வைத்திருந்ததற்காக கடந்த 2018 டிசம்பர் 14ஆம் தேதி ஷம்பு அகர்வால் என்ற நபரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசாரணையின் போது, ​​முதன்மை அமர்வு நீதிபதி ராம் சர்மா, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த விசாரணை அதிகாரி ஜெய்பிரகாஷ் பிரசாத்திற்கு உத்தரவிட்டார்.

எனினும், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போலீசாரால் பொருட்களை சமர்ப்பிக்க முடியவில்லை. இந்த பொருட்களை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை எலிகள் அழித்துவிட்டதாக விசாரணை அதிகாரி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், ஷம்பு மற்றும் அவரது மகனின் வழக்கறிஞர் இந்தியா டுடே டிவியிடம், தனது கிளையண்ட் பொய் தகவல் புனையப்பட்டுள்ளது என்று கூறினார். வக்கீல் அபய் பட், பொருளின் அடிப்படையில் சட்டம் அதன் போக்கை எடுத்துக்கொள்வதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல்துறையால் ஏன் காட்சிப்படுத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரணை நடத்த தன்பாத் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here