இனம், சமயம்: பதற்றத்தை தணிப்பதில் அன்வார் தோல்வி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இனம், சமயம் தொடர்பான பதற்றங்களை தணிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தோல்வி கண்டிருக்கிறார் என்று சரவாக்கை சேர்ந்த ஒரு தலைவர் சாடியிருக்கிறார்.

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தலையிட்டு நிலைமையை தணிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று பா’கெலுவான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாரு பியான் சாடினார்.

மடானி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் பேசி பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் தவறிவிட்டார் என்று அவர் சொன்னார்.

பிரதமர் செய்ய வேண்டிய கடமையை பேரரசர் செய்திருப்பதை பாரு பியான் சுட்டிக் காட்டினார்.

சில தினங்களுக்கு முன்னர் அம்னோ, ஜசெக தலைவர்களை அரண்மனைக்கு அழைத்து ஆலோசனை நல்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here