தனது தாயாருக்காக விஜய் செய்திருக்கும் காரியம் : ராகவா லாரன்ஸ் பாராட்டு

நடிகர் விஜய் தனது தாயார் ஷோபனா சந்திரசேகருக்காக சாய் பாபா கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது. இந்நிலையில் விஜய்யின் இந்த கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்றுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழும் விஜய், தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து விரைவிலே தனது ‘தளபதி 69’ படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் விஜய் தனது தாயாருக்காக சாய் பாபா கோவில் ஒன்று கட்டியுள்ளது கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் சாய் பாபா சிலை அருகில் நிற்பதை போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி தீயாய் பரவியது. ஆரம்பத்தில் இந்த போட்டோ வெளிமாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த ‘சாய்பாபா மந்திர்’ கோவில் கொரட்டூரில் இருக்கும் தனது சொந்த நிலத்தில் அம்மாவுக்காக விஜய் கட்டியதாக தகவல்கள் வெளியாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here