ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி ஜங்சன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த மக்கள் மீது கத்தியினால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். திடீரென நடந்த தாக்குதலால் சூழ்நிலையை சுதாகரித்து கொள்ள இயலாததால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலை கண்ட மக்கள் அனைவரும் வேகமாக வணிக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் தாக்குதல் நடத்திய மர்மநபரா என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கு இருந்த மக்கள் பலரும் அவர்களது செல்போனில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.