7 வாகனங்கள் மோதல்: 3 பேர் பலி- 3 பேர் படுகாயம்

கெத்தெரே-கோத்தா பாரு நெடுஞ்சாலையின் KM 9.9 இல் ஏழு வாகனங்கள் மோதிய விபத்தில்  3 மோட்டார் சைக்கிளோட்டிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்கள் என்று கோத்தா பாரு காவல்துறைத் தலைவர் ரோஸ்டி டாவூட் கூறினார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் பயணித்ததாக நம்பப்படுவதாகவும் அப்பகுதியில் வெளிச்சம் இல்லை என்றும் அவர் கூறினார்.

 முன்பக்கத்தில் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று தவிர்க்க முயலும்போது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பின்னால் வந்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் அவற்றின் மீது மோதின. கோத்த பாரு செல்லும் அவசர பாதையின் இடதுபுறத்தில் நின்றிருந்த கார் ஒன்றின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. ஏனெனில் அந்த  பகுதியில் சாலை விளக்குகள் இல்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

வாகனமோட்டிகளில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ரோஸ்டி கூறினார். கார் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் கோத்தா பாரு காவல்துறை தலைமையகம் அல்லது விசாரணை அதிகாரி நூருல் இஸ்ஸாதி ரோஸ்லியை 09-7752315 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here