நெகிரி செம்பிலானில் கனமழை; சுங்கை லிங்கியில் திடீர் வெள்ளம்

சிரம்பான்:

நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) மாலை முதல் மூன்று மணி நேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானின் பல தாழ்வான பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்பாங்கான், ரசா, ரஹாங் மற்றும் மெம்பாவில் உள்ள சுங்கை லிங்கி ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் கோத்தா, ரெம்பாவில் உள்ள டிடியான் பிந்தாங்கூரில் சில தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

நேற்றிரவு 10 மணி நிலவரப்படி, நீர்நிலைகளில் நீர் மட்டம் குறையத் தொடங்கியதால், வீடுகளிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here