உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கில் குறைந்தது ஒன்பது கடைகளில் நடந்த கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) அதிகாலை 3 மணியளவில் குவாங்கில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சோதனை செய்ததாகவும் 23 முதல் 32 வயதுடைய மூன்று உள்ளூர் ஆடவர்களை கைது செய்ததாகவும் உலு சிலாங்கூர் OCPD துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசல் தஹ்ரிம் கூறினார்.
ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு ஹெல்மெட்கள் மற்றும் ஆடைகள் உட்பட பல்வேறு பொருட்களை நாங்கள் கைப்பற்றினோம். திங்கள்கிழமை (ஏப்ரல் 22) அவர் ஒரு அறிக்கையில்,மூன்று ஆடவர்களும் போதைப்பொருளுக்கு சாதகமாக சோதனை செய்தனர் என்று அவர் கூறினார். சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று துணைத் தலைவர் அஹ்மட் பைசல் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கில் உள்ள 24 மணி நேர கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் சம்பந்தப்பட்ட கொள்ளை வழக்குகளுக்கு இவர்கள் தான் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம். குண்டர் கும்பல் கொள்ளைக்காக குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் 397ன் கீழ் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். ஏதேனும் குற்றச் செயல்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அஹ்மத் பைசல் கேட்டுக் கொண்டார். எந்த ஒரு குற்ற வழக்குகளிலும் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.