பாசீர் பூத்தே:
நேற்று மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன 28 வயது மீனவர், 17 மணி நேரமாக தத்தழித்த மீனவர், இன்று தும்பாட் கடற்பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டார்.
முஹமட் நர்ஸ்யாரிஃப் மாட் நசீர் என்ற ஆடவர், இன்று காலை 10.30 மணியளவில் உள்ளூர் மீன்பிடி படகு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில மலேசிய கடல்சார் அமலாக்க இயக்குனர், கடல்சார் கேப்டன் எர்வான் ஷா சோஹ்தி தெரிவித்தார்.
“சில மீனவர்கள் தங்கள் படகின் முன் ஒரு நபர் நீந்துவதைக் கண்டு, உடனடியாக அவரைக் காப்பாற்றினார்கள், இருப்பினும் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார் என்றும், அவர் மீட்கப்பட்டபோது சுயநினைவு அற்ற நிலையில் காணப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
அவரை காப்பாற்றிய மீனவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் என்றார்.
குறித்த நபர் கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என்று அவர் சொன்னார்.