ஜூலை முதல் ஆறு மாதங்களுக்கு பினாங்கு மக்களுக்கு 10,000 லிட்டர் தண்ணீர் இலவசம்!

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு வாழ் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் பாவிக்கும் முதல் 10,000 லிட்டர் தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இத்திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சலுகை RM5,000 க்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்கள் குடும்ப நட்பு தள்ளுபடி திட்டத்தின் கீழ் RM20 தள்ளுபடியும் பெறும். இந்த சலுகை வரும் ஜூலை முதல் டிசம்பர் வரை விலக்கு மற்றும் தள்ளுபடி வழங்கப்படும் என்று பினாங்கு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்தார்.

“தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (SPAN) மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிய உள்நாட்டு குடிநீர் கட்டண விகிதங்கள் தொடர்பான புகார்களை மாநிலம் கவனத்தில் கொண்டுள்ளது, இது தொடர்பான மேலதிக நடைமுறைகள் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அவர் சொன்னார் .

இந்நிலையில் முதல் குழுவில் உள்ள பயனர்கள் செலுத்தவேண்டிய RM12.40 உடன் ஒப்பிடும்போது, ​​இரண்டு மாதங்களுக்கு RM6.20 மட்டுமே செலுத்த வேண்டும் என்று உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி கூறினார்.

அதேநேரம், இரண்டாவது குழுவிலுள்ள பயனர்கள் 30 வெள்ளிகட்டணமாகச் செலுத்தினால், இரண்டு மாதங்களுக்கு 23.80 வெள்ளி மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here